பால் புரட்சி செய்வோம், புதுமையினராய் – கவிதை

சென்னை குயர் இலக்கிய விழா 2020 — வாசிப்புமேடை

வசை பல கேட்டு,

வலிகள் தாங்கி,

ஊனை சிறையென எண்ணி,

உயிர் கொன்று,உதிரம் சிந்திய நாட்கள்உதிரட்டும்.

சிறைகள் உடைத்து,

சிறகுகள் கொண்டு,

வண்ணங்களாய் வானவில்லில் வலம் வருவோம்.

ஏன் ஏற்க வேண்டும்எவனோ சொன்ன இருபாலினை.

பால் புரட்சி செய்வோம், புதுமையினராய்.